தருமபுரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியமானது 26.08.2019 முதல் கிருஷ்ணகிரி ஒன்றியத்திலிருந்து பிரிக்கப்பட்டு தருமபுரியை தலைமையிடமாகக் கொண்டு தனி ஒன்றியமாக செயல்பட்டு வருகிறது.

இவ்வொன்றியத்தின் கட்டுப்பாட்டின் கீழ் 259 பதிவு பெற்ற சங்கங்கள் செயல்படுகிறது இச்சங்கத்தில் உள்ள 13273 பதிவு பெற்ற உற்பத்தியாளர்கள்  மூலம் நாளொன்றுக்கு சராசரியாக 140000 லிட்டர் தரமான பால் 33 குளிர்விப்பு நிலையம் மூலம் கொள்முதல் செய்யப்படுகிறது. இதில் 120000 லிட்டர் பால் சென்னை இணையத்திற்கு அனுப்பப்படுகிறது. சராசரியாக 6000 லிட்டர் பால் உள்ளுர் விற்பனைக்கு போக மீதம் 14000 லிட்டர் பால் வெண்ணெய் மற்றும் பால் பவுடராக உருமாற்றம் செய்யப்படுகிறது.

இவ்வொன்றியத்தில் உள்ள பதிவு பெற்ற (259) சங்க உறுப்பினர்களிடமிருந்து தரமான பாலை (MBRT 2.40 Hours, Fat:4.1, SNF:8.1) கொள்முதல் செய்து வருகிறோம்.

தருமபுரி மாவட்ட மக்களின் அவசியம் மற்றும் நலனை கருத்தில் கொண்டு நுகர்வோருக்கு பால் மற்றும் பால் உபபொருட்கள் எளிதில் கிடைக்க இம்மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் 3 அதிநவீன பாலகங்கள் உட்பட 130 முகவர்கள் மூலம் ஆவின் பாலகங்கள் அமைக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

இது தவிர இவ்வொன்றியத்தின் மூலம் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் 110 விதியின் கீழ் ரூ.50 லட்சம் திட்ட மதிப்பீட்டின் 10 நவீன பாலகங்கள் அமைக்க இம்மாவட்டத்தில் கீழ்காணும் இடங்கள் தேர்வு அசெய்யப்பட்டு அதற்கான பூர்வாங்க பணிகள் நடைnடிபற்று வருகிறது. அவையாவன

1.தருமபுரி புர்

2.அரூர் வட்டாட்சியர் அலுவலகம்

3.ஒகேனக்கல்

4.பெண்ணாகரம் மேம்பாலம்

5.சந்தைகேட்

6.பாலக்கோடு தக்காளி மண்டி

7.பாலக்கோடு குளர்பதன கிடங்கு

8.குப்பூர்

9.நீதிமன்ற வளாகம் தருமபுரி

10.பெண்ணாகரப்பிரிவு சாலை

அதன் மூலம் இம்மாவட்டத்தின் நுகர்வோர்களுக்கான பால் மற்றும் பால் உபபொருட்களின் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய இவ்வொன்றியம் உறுதி பூண்டுள்ளது.

தபிடி 1179 தருமபுரி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்தின் மூலம் கீழ்காணும் திட்டங்கள் தற்பொழுது செயல்படுத்தப்பட்டு வருகிறது.

1. தேசிய பால் அபிவிருத்தி திட்டம் - (2018 - 2019)

இத்திட்டத்தின் மூலம் ரூ.5.00 கோடி மதிப்பிலான 123000 லிட்டர் பால் கையாளும் திறன் கொண்ட 16 பால் தொகுப்பு குளிர்விப்பு மையங்கள் இம்மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

2. தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டம்  (2020 - 22)

இத்திட்டத்தின் 5 கால்நடை மருத்துவர்கள் திறம்பட செயல்பட்டு பால் உற்பத்தியாளர்கள் இருப்பிடத்திற்கே நேரடியாக சென்று கால்நடைகளுக்கு மருத்துவ சிகிச்சைகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

3. மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் 110 விதியின் கீழ் 60 இலட்சம் மதிப்பிலான 10 நவீன பாலகங்கள் இம்மாவட்டத்தில் 10 இடங்களில் தெரிவு செய்யப்பட்டு அமைப்பதற்கான பூர்வாங்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.