தூத்துக்குடி ஒன்றியம்:

தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியமானது அப்போதைய ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள்  ஒன்றியத்திலிருந்து பிரிக்கப்பட்டு தூத்துக்குடியை தலைமை இடமாகவும் செயல் எல்லையாகவும் கொண்டு 26.08.2019 இல் துவங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. பின்னர் தூத்துக்குடி கூட்டுறவு பால் விற்பனை ஒன்றியத்தை ஒருங்கிணைத்து புதிய தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியமானது TUT 34 என பதிவு செய்யப்பட்டு தற்போது இயங்கி வருகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் 165 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் மூலம் நாளொன்றுக்கு சராசரியாக 34000 லிட்டர் பால் கொள்முதல் செய்யபட்டு வருகிறது. இதன் மூலம் 3960 பால் ஊற்றும் உறுப்பினர்கள் பயனடைந்து வருகின்றனர். இந்த பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் 17865 பால் உறுப்பினர்கள் உள்ளனர். கிரமபுர வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் மூலம் தினசரி 6206 லிட்டர் பால் உள்ளூர் விற்பனையாக செய்யப்பட்டு வருகிறது.

டீதூதுக்குடி ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் 48000 LPD  பால் குளிர்விப்பு நிலையம் 7 மூலம் நாளொன்றுக்கு 34000 லிட்டர் பால் சேகரிக்கப்பட்டு, திருநெல்வேலி மற்றும் மதுரை ஒன்றியத்திற்கு அனுப்பப்படுகின்றது. ஒன்றிய பால் சேகரிப்பு பணியில் 17 எண்ணிக்கை பால் சேகரிப்பு ஒப்பந்த வழித்தட வாகனங்கள் செயல்படுகிறது.

தற்போது இம்மாவட்டத்தில் உறுப்பினர்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் பாலை இம்மாவட்டத்திலேயே பால் பதனிடவும், பால் உபபொருட்கள் உற்பத்தி மேற்கொள்ளவும் எதுவாக பிரத்யேகமாக மத்திய பால்